செய்திகள் :

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

post image

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினர்கள் வியாழக்கிழமை குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

புதுவை சட்டப் பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் மறைந்த தலைவா்களுக்கு இரங்கல் குறிப்பை வாசித்து முடித்ததும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு ஒரு பிரச்னை தொடர்பாக பேச ஆரம்பித்தார்.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மு. வைத்தியநாதன் உள்ளிட்ட 2 பேர் மாசு கலந்த குடிநீா் விநியோகத்தால் நகர பகுதியில் மக்கள் பாதிப்பு மற்றும் சட்டப்பேரவையைக் கூடுதலாக 10 நாள்கள் நடத்த வலியுறுத்தி கூச்சல் இட்டனர்.

மேலும், சுயேச்சை எம்.எல்.ஏ நேருவும் கூச்சலிட்டார். சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் குறுக்கிட்டு அமைதிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரை இருக்கையில் அமருமாறும் வலியுறுத்தினார்.

இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுக , காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவைத் தலைவர் செல்வம் முன்பு தரையில் அமர்ந்து தர்னா நடத்த முயன்றனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ஆர். செல்வம் அனைவரையும் வெளியேற்றுமாறு பேரவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சிவா உள்ளிட்ட ஒரு சில எம்.எல்.ஏக்களை பேரவை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வெளியே சென்றனர். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். சுயேச்சை எம்.எல்.ஏ நேருவும் வெளியேற்றப்பட்டார். மேலும், சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசிய அனைத்தையும் அவை குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார் பேரவைத் தலைவர் ஆர். செல்வம்.

கம்பம் அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த தொழிலாளி

DMK, Congress and Independent members were expelled from the Puducherry Legislative Assembly on Thursday.

அதிமுக அமித்ஷாவின் அடிமையாகிவிட்டது: அமைச்சர் சேகர்பாபு

அதிமுக அமித்ஷாவின் அடிமையாகிவிட்டது என தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, கரூர் முப்பெரும் விழா அரசியல் களத்தில் திமுகவை விமர்சித்தவர்களும் வாழ்த்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார். இந்து சமய அறநிலைய... மேலும் பார்க்க

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

நெல்லையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியமாக இருசக்கர வாகன ஓட்டியுடன் வாக்குவாதம் செய்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகி... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே சற்று ஏற்ற, இறக்கமாக ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை. கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கோகைன் எனப்படும் போதைப் பொருளை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக கென்யா நாட்டைச... மேலும் பார்க்க