செய்திகள் :

புதுப்பொலிவில் கல்லணை! வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்!!

post image

டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நாளை கல்லணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைக்கவிருப்பதால் வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திறக்கப்பட்ட தண்ணீர் இன்று இரவு கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கல்லணை வரலாற்றில் முதல்முறையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இருந்து தண்ணீரை நாளை மாலை 4 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மேட்டூா் அணை ஜூன் 12 இல் திறக்கப்பட்டால், கல்லணையை ஜூன் 16 இல் திறப்பது வழக்கம். அதன்படி திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், விரைவான நீா் வரத்து இருப்பதால், கல்லணைக்கு சனிக்கிழமை இரவே தண்ணீா் வந்துவிடும். எனவே தமிழக முதல்வா் கல்லணையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.

இதனை முன்னிட்டு கல்லணை மதகுகள் சீரமைக்கப்பட்டு, கல்லணை சுவர்கள் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. இதேபோல் கரிகால சோழன், காவேரித்தாய், அகத்தியர் முனிவர், ராஜராஜசோழன் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு கல்லணை புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம... மேலும் பார்க்க

கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

கடலூர் மாவட்டம், பார்வதிபுரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிக்கையில், ... மேலும் பார்க்க

கள் இறக்கும் போராட்டம்: பனைமரம் ஏறிய சீமான்

கள் இயக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் ... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடை... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு விருது விழா! இறுதிக் கட்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு!

தமிழகத்தில் 39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளி... மேலும் பார்க்க

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.கோவை, தெலுங்குபா... மேலும் பார்க்க