செய்திகள் :

புதுமணத் தம்பதிகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா? - ம.பி. முதல்வர்

post image

புதுமணத் தம்பதிகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா? என பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ராஜா ரகுவன்ஷி கொலை விவகாரத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்த சோனம் (24) என்பவருக்கும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷிக்கும் (28) மே 11-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் சில நாள்களுக்குப் பின் மேகாலயத்துக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

தேனிலவு சென்ற புதுமணத் தம்பதிகள் இருவரும் காணாமல்போக, குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டியதாக சோனம் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் பெற்றோரின் தொழிற்சாலையில் கணக்காளராக இருந்த ராஜ் சிங் குஷ்வாஹாவுடன் காதல் ஏற்பட்டதால் அவரது உதவியுடன் கணவரைக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்,

"தங்கள் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி குடும்பத்தினர் விவாதிக்கும்போது, அது தொடர்பான பல விஷயங்களை கவனமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியம். திருமணமான புதுமணத் தம்பதிகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா? என வரும் நாள்களில் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் நான் மிகவும் வேதனையடைந்தேன், ஆனால் இதன் மூலமாக நாம் அனைவரும் ஒரு பாடம் கற்றுக்கொண்டோம். இது மிகவும் சிக்கலான வழக்கு" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | தேனிலவு கொலை: கடைசி நேரத்தில் மாறிய திட்டம்.. மனம் மாறாத சோனம்!

சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் 2 கிராம மக்களைக் கொன்ற நக்சல்கள்

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளுக்கு ... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க