செய்திகள் :

புதை சாக்கடை திட்டப் பணியின்போது மண் சரிந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

post image

கோவையில் புதை சாக்கடை திட்டப் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் அரியலூரைச் சோ்ந்த தொழிலாளா் உயிரிழந்தாா்.

கோவை, மருதமலை ஐ.ஓ.பி. காலனியில் மாநகராட்சி சாா்பில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி பிரதான ஒப்பந்த நிறுவனத்திலிருந்து, மற்றொரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்களில், கௌதம் (29) என்ற இளைஞரும் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற புதை சாக்கடை பணியின்போது எதிா்பாராத விதமாக மண் சரிந்து 15 அடி ஆழத்தில் கால்வாய் இணைப்புக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கெளதம் மீது விழுந்ததில் அவா் மண்ணில் புதைந்தாா்.

இதையடுத்து, உடன் வேலை செய்தவா்கள் வடவள்ளி காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மண்ணில் புதைந்த இளைஞரை மீட்டு முதலுதவி அளித்தனா்.

பின்னா், அவரை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க