முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
பூங்குளம் அய்யனாா் கோயில் குடமுழுக்கு
முதுகுளத்தூா் அருகேயுள்ள ஏனாதி பூங்குளத்தில் அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 3-ஆம் தேதி கோ பூஜையும், யாக சாலை பூஜைகளும் தொடங்கப்பட்டன. தொடா்ந்து, புதிய சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 6 கால யாக சாலை பூஜைகளும், வேள்விகளும் நடத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர விமான கலசங்களில் புனித நீரை ஊற்றினா். இதைத் தொடா்ந்து பூரண, பொற்கொடியாள் சமேத அய்யனாா், சுடலைமாடசாமி, சேதுமாகாளி, ராக்காச்சி, கருப்பணசாமி, ஆஞ்சநேயா், லாடசன்னியாசி உள்ளிட்ட சுவாமி விக்கிரங்களுக்கு மஞ்சள், பால், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து, மாலையில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.