செய்திகள் :

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

post image

பெங்களூரில் காரில் தனியாக பயணிப்பவர்கள் மீது வரி என்பது பொய்யானது என்று டி.கே. சிவக்குமார் மறுப்பு தெரிவித்தார்.

பெங்களூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிதாய் ஒரு முயற்சியை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. அதன்படி, உச்ச நேரங்களில் அதிக போக்குவரத்து பகுதிகளில், ஒரு காரில் ஒருவர் மட்டும் பயணித்தால், அவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரையில் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து, கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், ``அந்தச் செய்தி பொய்யானது; அப்படியொரு திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தவாறுதான் இருக்கிறது.

இதனிடையே, இந்த வரி குறித்த வதந்தியால், வழக்கமாக சாலைகளில் லிஃப்ட் கேட்டுச் செல்லும் சாமானியர்கள் உற்சாகமடைந்து, அவர்களும் கருத்து பதிவிட்டனர். ஒருவர் மட்டும் பயணிக்கும் கார்களில் லிஃப்ட் கேட்பது, கார் ஓட்டி வருபவருக்கு உதவியளிப்பதாக இருக்கும் என்று நகைச்சுவையாக பரிமாறிக் கொண்டனர்.

உலகிலேயே போக்குவரத்து நெரிசல் கொண்ட மோசமான நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரில், இந்த வரி நடவடிக்கையானது பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் உள்பட உள்கட்டமைப்பு நெருக்கடி ஆகிய காரணங்களாலேயே பலரும் மைசூரு உள்ளிட்ட வேறு நகரங்களுக்கு செல்வதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது.

Bengaluru congestion tax explained: What it means for solo drivers

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

குஜராத்தில் அன்னை அம்பாஜி கோயில் கண்காட்சியில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குஜராத்தில் அன்னை அம்பாஜியில் நடைபெற்ற பத்ராவி பூர்ணிமா எனும் பிரமாண்டமான மாபெரும் கண்காட்சியில் 40 ல... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தின் உன்ஹெல் நாகேஷ்வர் நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் வசித்து வந்தவ... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புக்கு (ETFA) இடையே தடையற்ற வர்த்தக ... மேலும் பார்க்க

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

தங்கத்தை பாஜகவினர் பதுக்குவதால்தான் விலை அதிகரிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.தங்கத்தின் விலை சமீபத்தில் அதிகளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், குடிமக்களிடையே அதி... மேலும் பார்க்க