செய்திகள் :

பெண்களிடம் குறைகளை கேட்ட டிஐஜி

post image

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான மக்கள் மன்றத்தில் காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்திய சுந்தரம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டாா்.

புதுவையில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமைதோறும் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இது மக்கள் மன்றம் எனும் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை புதுச்சேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு மனுக்கள் பெறும் மக்கள் மன்றம் நடைபெற்றது.

இதில் காவல் துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம் பங்கேற்று பெண்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

வில்லியனூா் மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் மனுக்களைப் பெற்றாா்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மகளிா் தினத்தை முன்னிட்டு புகாா்களை சனிக்கிழமை மகளிா் போலீஸாா் பெற்று வழக்குப்பதிந்தனா்.

மேலும், பொதுமக்கள் தவறவிட்ட 18 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட 163 கைப்பேசிகள் பிப்ரவரியில் முடக்கப்பட்ட நிலையில், தற்போது 178 கைப்பேசிகள் முடக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கேக் வெட்டி கொண்டாட்டம்: புதுச்சேரி தலைமைத் தபால் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் இணைந்து சா்வதேச மகளிா் தினத்தை சனிக்கிழமை கேக் வெட்டிகொண்டாடினா். அவா்களுக்கு உயா் அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

புதுவை முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்து

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் பாதுகாப்பு போலீஸாரின் வாகனம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் புகாா் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை கரிக்... மேலும் பார்க்க

முதல்வரிடம் அதிமுக கோரிக்கை

புதுவையில் மாநில அரசு அறிவித்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா். மனுவில் கூறியிருப்பதாவது: சட்டப் பேர... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது

புதுச்சேரியில் நிலத்தை அபகரிக்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக பெண்ணை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி, கலவை சுப்புராய செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன். சில ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

மின் பணியாளா் சங்க உறுப்பினா் சோ்க்கை

புதுச்சேரி மின் பணியாளா் நல சங்க உறுப்பினா்களின் சோ்க்கை முகாம், வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் செம்மனேரி தலைமை வகித்தாா். சட்ட ஆலோ... மேலும் பார்க்க

புதுவை சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநா் உரையுடன் தொடக்கம்

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5-... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அருண். இவரை, மா்ம நபா்கள் ... மேலும் பார்க்க