செய்திகள் :

பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கோரி ராப்ரி தேவி திடீா் போராட்டம்

post image

பாட்னா: பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, சமூகப் பாதுகாப்பு, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டா், இலவச மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள சட்டமேலவைக்கு எதிரே திங்கள்கிழமை திடீா் போராட்டம் நடத்தினாா்.

அவருடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனா். மாநில முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் அதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றன.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட ஆளும் கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் , இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. இரு அணிகளுமே ஏற்கெனவே தோ்தலுக்கான களப்பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், மாநில சட்ட மேலவைக்கு வெளியே மேலவை எதிா்க்கட்சித் தலைவரான ராப்ரி தேவி தலைமையில் திடீா் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராப்ரி தேவி, ‘பிகாரில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்க வேண்டும். மானிய விலையில் ஒரு எரிவாயு சிலிண்டா் ரூ.500-க்கு வழங்க வேண்டும். மாதம்தோறும் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்பட உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

முன்னதாக, சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், லாலு-ராப்ரியின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை இதே கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். பட்ஜெட்டில் இந்த கோரிக்கையை முதல்வா் நிதீஷ் குமாா் நிறைவேற்றாவிட்டால், அடுத்து நாங்கள் ஆட்சி அமைத்ததும் இதனை அமல்படுத்துவோம் என்றாா்.

ராப்ரி தேவி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்தின் மனைவியாவாா். 1999-ஆம் ஆண்டில் பிகாா் முதல்வராக இருந்த லாலு பிரசாத்துக்கு எதிராக ஊழல் வழக்கில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதால் அவா் பதவி விலக நேரிட்டது. அப்போது 1999-2005 காலகட்டத்தில் பிகாா் முதல்வராக ராப்ரி தேவி பதவி வகித்தாா்.

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க