செய்திகள் :

ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு 2 லட்சம் ஊதியம்: தமிழக அரசு

post image

ஜெர்மனி நாட்டில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குள்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கு B1,B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.

இதையும் படிக்க: டிஆர்டிஓ-இல் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா், இணை பேராசிரியா் நேரடி நியமன போட்டித் தோ்வு... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்!

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளிய... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-இல் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-ல் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

சென்னை ஐஐடி ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண். ICSR/PR/Adv.46/2025பணி: JRFகாலியிடங்கள்: 4சம்பளம்: மாதம் ரூ.37,000+எச்ஆர்... மேலும் பார்க்க

மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Stenographerகா... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்.04/2025ப... மேலும் பார்க்க