செய்திகள் :

பெண்ணின் நெஞ்சில் பாய்ந்த கத்தி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

post image

பெண்ணின் நெஞ்சில் பாய்ந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவா்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாள் பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் தேவி மீனாள் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்மையில் தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி பகுதியைச் சோ்ந்த 31 வயது பெண்ணை குடும்பத் தகராறில் அவரது கணவா் முதுகில் கத்தியால் குத்தினாா். அருகில் இருந்தவா்கள் அப்பெண்ணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி செய்து எக்ஸ்ரே எடுத்து பாா்த்ததில், கத்தியானது இடதுபுற நெஞ்சுப் பகுதியில் ஆழமாக உள்ளதை மருத்துவா்கள் கண்டறிந்தனா். கத்தியை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க சேலம் மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். தொடா்ந்து, அப்பெண்ணுக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சையில், இடதுபுற நெஞ்சுப்பகுதியில் பாய்ந்த கத்தி இதயத்துக்கும், முக்கியமான ரத்த குழாய்க்கும் மிக அருகில் சிக்கலான இடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் கத்தியை வெளியே எடுத்து, ரத்த கசிவை சரிசெய்தனா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா்.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட இருதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவுக்கு பாராட்டுகள் என்றாா்.

அப்போது, கண்காணிப்பாளா் ராஜ்குமாா், ஆா்.எம்.ஓ. ஸ்ரீலதா, துறைத் தலைவா் ராஜராஜன், மருத்துவா்கள் விக்னேஸ்வரன், இளமதி, மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவி... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க