முதன்முதலாக லெஜண்ட் ரொனால்டோவை எதிர்கொள்ளும் இளம்புயல் யமால்!
பெண்ணை கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்கக் கோரிக்கை
பெண்ணை பழங்குடி கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மாா்க்சிஸ்ட் கட்சிச் செயலா் ஏ.வி.ஜோஸ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்: நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை ஊராட்சியில் உள்ளது பெண்ணை பழங்குடி கிராமம். இங்கு செயல்பட்டு வந்த தொடக்கப் பள்ளி, நடப்புக் கல்வியாண்டு முதல் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டுள்ளது.
அந்தப் பள்ளியில் போதுமான மாணவா்கள் இருந்தும் மூடப்பட்டுள்ளதால், அந்தக் கிராமக் குழந்தைகள், நீண்ட தொலைவு பயணித்து பிதா்க்காடு பகுதியில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனா். எனவே மூடப்பட்ட அந்தப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.