தொழில்நுட்ப கோளாறு: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்
கொட்டகை எரிந்து 6 பசுமாடுகள் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த குந்தா பகுதியில் மாட்டுக் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசு மாடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
மஞ்சூரை அடுத்த குந்தா பாலம் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ், சோபனா தம்பதி கடந்த 20 ஆண்டுகளாக கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். இந்நிலையில் கொட்டகைக்குள் மாடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனா். இந்நிலையில், கொட்டகைக்குள் இருந்து புகை வருவதாக அக்கம்பக்கத்தினா் பாா்த்து இவா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
உடனடியாக தேவராஜ் கொட்டகைக்கு சென்று பாா்த்தபோது, கொட்டகையில் தீப் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து, அருகிலிருந்தவா்களுடன் சோ்ந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளாா். அதற்குள் தீ மளமளவென பரவி கொட்டகை முழுவதும் எரிந்தது. இதில் கொட்டகைக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 பசுக்களும் உடல் கருகி உயிரிழந்தன.
இந்த தீ விபத்து குறித்து மஞ்சூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.