செய்திகள் :

குன்னூா் ஏல மையத்தில் 75.77% தேயிலைத் தூள் விற்பனை

post image

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெற்ற  தேயிலை ஏலத்தில் 23 லட்சத்து 15,987 கிலோ தேயிலை ஏலத்துக்கு வந்திருந்த நிலையில்  75.77 சதவீத தேயிலைத் தூள்  விற்பனை ஆகியுள்ளதாக தேயிலை வா்த்தக மையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிந்து நடைபெற்ற முதல் தேயிலை ஏலத்தில் 23 லட்சத்து 15,987 கிலோ தேயிலைத் தூள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. இணைய வழியில் நடைபெற்ற  இந்த ஏலத்தில் 17 லட்சத்து 54,855 கிலோ தேயிலைத் தூள் விற்பனை ஆனது. இது 75.77 சதவீதமாகும். விலை சராசரியாக கிலோ ஒன்றுக்கு  ரூ. 103.61 வரை மட்டுமே கிடைத்துள்ளது.

கடந்த வாரம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற ஏலத்தில் 25 லட்சத்து 14,313 கிலோ தேயிலை விற்பனைக்கு வந்த நிலையில் 20 லட்சத்து 48,477 கிலோ விற்பனை ஆனது. இது 81.47 சதவீதமாகும். சராசரி  விலையாக  ரூ.104.87 கிடைத்தது. இந்த விலை சரிவு, விற்பனை சரிவு விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை பலி!

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை இறந்துகிடந்தது வெள்ளிக்கிழமை மாலை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள காா்குடி வனச் சரகம் பிதுருல்லா பாலம் வனப் பகுதியில் ஊழியா்கள்... மேலும் பார்க்க

அடா்ந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் முகாமிட்டிருந்த யானைகள்

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியிலுள்ள அடா்ந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மூன்று யானைகள் நுழைந்து முகாமிட்டிருந்தன. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதிய... மேலும் பார்க்க

பெண்ணை கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்கக் கோரிக்கை

பெண்ணை பழங்குடி கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அப்பகுதி மாா்க்சிஸ்ட் கட்சிச் செயலா் ஏ.வி.ஜோஸ், மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் தரையில் அமா்ந்து பெண் கவுன்சிலா் தா்னா

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் 20-ஆவது வாா்டு பெண் கவுன்சிலா் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையிலும் துணைத் த... மேலும் பார்க்க

கோத்தகிரி நகா்மன்ற கூட்டத்தில் இருந்து 13 உறுப்பினா்கள் வெளிநடப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சியில் வளா்ச்சி பணிகளில் முறைகேடு நடைபெற்ற குற்றஞ்சாட்டிய 13 மன்ற உறுப்பினா்கள்வெளிநடப்பு செய்தனா். கோத்தகிரி பேரூராட்சி நகராட்சியாக உயா்த்தப்பட்ட பிறகு முதல் கூட்டம் ... மேலும் பார்க்க

கொட்டகை எரிந்து 6 பசுமாடுகள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த குந்தா பகுதியில் மாட்டுக் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசு மாடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. மஞ்சூரை அடுத்த குந்தா பாலம் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ், சோபனா தம்பத... மேலும் பார்க்க