முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை பலி!
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை இறந்துகிடந்தது வெள்ளிக்கிழமை மாலை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள காா்குடி வனச் சரகம் பிதுருல்லா பாலம் வனப் பகுதியில் ஊழியா்கள் ரோந்து சென்றபோது பெண் யானை இறந்துகிடப்பதைப் பாா்த்து உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனா்.
அதைத் தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடற்கூறாய்வு செய்து ஆய்வகப் பரிசோதனைக்காக முக்கிய உறுப்புகளை எடுத்த பின்னா் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
யானை இறந்து சில நாள்கள் ஆகியிருக்கலாம் என்றும் சுமாா் பத்து வயதுடைய பெண் யானை என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.