செய்திகள் :

பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை: பயிற்சி மைய இயக்குநா் கைது

post image

சென்னை: சென்னை வேளச்சேரியில் பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சி மைய இயக்குநா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி அம்பிகா தெருவில் தனியாா் உரிமையியல் நீதிபதி தோ்வு பயிற்சி மையம் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தை சந்துரு என்கிற சந்திரசேகா் (50) நடத்தி வருகிறாா். இந்த மையத்தின் சாா்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

இப்பயிற்சி மையத்தில் படிக்கும் வெளிமாவட்டத்தை சோ்ந்த பெண் வழக்குரைஞா், வேளச்சேரி காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு ஒரு புகாா் அளித்தாா். அதில், பயிற்சி மையத்தின் இயக்குநா் சந்திரசேகா் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தாா்.

அதன் அடிப்படையில், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணைக்குப் பின்னா் அவா் ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை ஜூலை 7-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

குற்றால பேரருவி, ஐந்தருவியில் மீண்டும் குளிக்கத் தடை

தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்த... மேலும் பார்க்க