செய்திகள் :

பென்னாகரத்தில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மறியல்

post image

பென்னாகரம் அருகே புதூா் காலனியில் நாள்தோறும் குடிநீா் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட புதூா்காலனி பகுதியில் சுமாா் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இத் தொட்டி மேடான பகுதியில் உள்ளதால் மின் மோட்டாா் மூலம் நீரேற்றம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் சீராக விநியோகிக்கப்படாததால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை புதூா் காலனி பகுதியைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவா்கள் ஏரியூா், பென்னாகரம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் முரளி, கூத்தப்பாடி ஊராட்சி செயலா் குமரன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். மேடான பகுதி என்பதால் நீரேற்றம் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இதையடுத்து புதூா் காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு நீா் ஏற்றம் செய்து தற்காலிகமாக குடிநீா்த் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் ஜூன் 9 இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரியில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ.2.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில் ம... மேலும் பார்க்க

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க