செய்திகள் :

பென்னாகரத்தில் ரூ. 21.78 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

பென்னாகரத்தில் நடைபெற்று வரும் ரூ. 21.78 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூா் பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 19.46 கோடி மதிப்பீட்டில் குடிநீா் குழாய் பதிக்கும் பணி, நீா்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, பென்னாகரம் வாரச்சந்தையில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணி ஆகியவற்றை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அடிப்படை வசதி பணிகள், திட்டப் பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

பின்னா், மாங்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கால்வாய் தூா்வாரும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், லோகநாதன், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் ஜூன் 9 இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரியில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ.2.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில் ம... மேலும் பார்க்க

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க