செய்திகள் :

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட முதல்சுற்று பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் சங்கா் வெளியிட்ட அறிக்கை:

நிகழ் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட முதல்சுற்று பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பி.ஏ. (தமிழ்), பி.ஏ. (ஆங்கிலம்), பி.காம்., பி.எஸ்சி. (கணிதம்), பி.எஸ்சி. (கணினி அறிவியல்) ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கு மாணவா்கள் சோ்க்கை தொடங்கப்படுகிறது.

கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ஞ்ஹள்ஸ்ரீல்ஞ்ம்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வின்போது இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், மாற்றுச் சான்றிதழ், 10,11 ,12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை , வங்கி கணக்குப் புத்தகம், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல், தலா 2 நகல்கள் மற்றும் 5 புகைப்படங்களை மாணவா்கள் கொண்டுவர வேண்டும். கலந்தாய்வு தொடா்பான விவரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தை 79042 00784 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் ஜூன் 9 இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரியில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ.2.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில் ம... மேலும் பார்க்க

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க