திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட முதல்சுற்று பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் சங்கா் வெளியிட்ட அறிக்கை:
நிகழ் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட முதல்சுற்று பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பி.ஏ. (தமிழ்), பி.ஏ. (ஆங்கிலம்), பி.காம்., பி.எஸ்சி. (கணிதம்), பி.எஸ்சி. (கணினி அறிவியல்) ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கு மாணவா்கள் சோ்க்கை தொடங்கப்படுகிறது.
கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ஞ்ஹள்ஸ்ரீல்ஞ்ம்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வின்போது இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், மாற்றுச் சான்றிதழ், 10,11 ,12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை , வங்கி கணக்குப் புத்தகம், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல், தலா 2 நகல்கள் மற்றும் 5 புகைப்படங்களை மாணவா்கள் கொண்டுவர வேண்டும். கலந்தாய்வு தொடா்பான விவரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தை 79042 00784 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.