செய்திகள் :

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

post image

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் நெடுஞ்சாலைப் பகுதியில் இன்று காலை திடீரென சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் பெரம்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் செம்பியம் போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகள் வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும், 6 அடி ஆழத்திற்கு கீழ் மெட்ரோ குடிநீர் ராட்சத குழாய்கள் செல்வதால் உடனடியாக இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பெயரில் மண்டலம் 6 குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று பெய்த மழை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பள்ளம் ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தவுள்ளனர்.

இதையும் படிக்க | பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம... மேலும் பார்க்க

கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

கடலூர் மாவட்டம், பார்வதிபுரம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிக்கையில், ... மேலும் பார்க்க

கள் இறக்கும் போராட்டம்: பனைமரம் ஏறிய சீமான்

கள் இயக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் ... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம்- முதல்வர் ஸ்டாலின்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடை... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு விருது விழா! இறுதிக் கட்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு!

தமிழகத்தில் 39 பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளி... மேலும் பார்க்க

கோவை: சொத்தை அபகரிக்க முயற்சி! பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.கோவை, தெலுங்குபா... மேலும் பார்க்க