செய்திகள் :

பெரியார், அண்ணா சர்ச்சை விடியோ: இந்து முன்னணிக்கு ஓபிஎஸ் கண்டனம்!

post image

முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சித்து விடியோ வெளியிட்ட இந்து முன்னணி அமைப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி அமைப்பினர் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில் பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட தலைவர்களை விமர்சித்து விடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி, தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து, பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியினை அமைத்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, நான்கு முறை அதிமுக ஆட்சியை அமைத்தவர் அம்மா. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆகியோரால் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர். நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி கண்டனத்திற்குரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அவசரநிலை இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

கூலித்தொழிலாளிக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது, வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளி பொற்செல்விக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

எர்ணாகுளம் - பெங்களூர் ரயிலில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க முயன்றவர்கள் கைது!

கோவை: பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு தமிழகம் வழியே இயக்கப்படும் ரயிலின் பெட்டியில், தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.எர்ணாகுளம... மேலும் பார்க்க

தந்தை திட்டியதால் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மகன்!

நெல்லை மேலப்பாளையத்தில் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதால், அவர் தூங்கும்போது கல்லைப்போட்டுக் கொலை செய்த மகனை மேலப்பாளையம் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்நெல்லை மேலப்பாளையம் ம... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில்... மேலும் பார்க்க

ஆக. 15 முதல் விஜய் சுற்றுப்பயணம்: எங்கிருந்து?

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் வரும் ஆக. 15 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.தவெக தலைவர் விஜய், தமிழகத்... மேலும் பார்க்க