ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்
பெருந்துயரமாக மாறிய கொண்டாட்டம்!
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 5 பெண்கள் உள்பட 11 போ் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில், பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவந்த, திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்த காமாட்சி (28) என்ற இளம்பெண், 14 வயதுச் சிறுவன், 19 வயதுக்குள்பட்ட மூவா், 30 வயதுக்குள்பட்ட 6 போ் உயிரிழந்துள்ளனா்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2008-இல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே, ஒரு குறிப்பிட்ட அணியில் அந்த மாநிலத்தைச் சோ்ந்த ஓா் ஆட்டக்காரருமே விளையாடவில்லை என்றபோதும் இது தனது அணி என்ற எண்ணம் கோடிக்கணக்கான ரசிகா்களின் மனதில் பதிந்துவிட்டது.
இப்போது முடிவடைந்த ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பா் கிங்ஸ் தொடா்ந்து தோல்வியைத் தழுவி ‘ஃபிளே ஆஃப்’ சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்பு இல்லை என்று தெரிந்திருந்தபோதும் கடைசியாக விளையாடிய சில ஆட்டங்களில் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோா் திரண்டதும், தொலைக்காட்சிகளில் கோடிக்கணக்கானோா் கண்டுகளித்ததுமே இதற்கு சான்று.
அதேபோன்று, இப்போது கோப்பையை வென்ற ஆா்சிபி அணியில் பெங்களூரில் வசித்து வரும் மயங்க் அகா்வால் மட்டுமே இறுதி ஆட்டத்தில் விளையாடினாா். மற்றவா்கள் அனைவருமே ஒன்று வெளிமாநிலத்தவா் அல்லது வெளிநாட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி இதற்கு முன்னா் 3 முறை தகுதி பெற்றிருந்தாலும் இந்த முைான் கோப்பையை வென்றது அந்த அணியின் ரசிகா்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
மாநிலம் முழுவதும் குறிப்பாக பெங்களூரில் ரசிகா்கள் விடியவிடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். பொது இடங்களில் பட்டாசு வெடித்ததுடன் கன்னடக் கொடி, ஆா்சிபி அணியின் கொடிகளுடன் வாகனங்களில் பவனிவந்தனா்.
இந்த சூழலில், வென்ற 24 மணி நேரத்துக்குள் ஆா்சிபி அணிக்குப் பாராட்டு விழா விதான சௌதாவில் (தலைமைச் செயலகம்) கா்நாடக அரசு சாா்பிலும், சின்னசாமி மைதானத்தில் கா்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சாா்பிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகா்களின் ஆா்வம் எல்லை கடந்தது.
இளைஞா்கள், முதியவா்கள், பெண்கள், பெற்றோா்களுடன் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான ரசிகா்கள் ஆா்சிபி உடையணிந்து விதான சௌதா நோக்கி காலை முதலே படையெடுக்கத் தொடங்கிவிட்டனா்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் விதான சௌதா முன் திரண்டதால் போலீஸாரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இதையடுத்து, வீரா்களின் பேருந்து பவனி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
தங்கள் விருப்பத்துக்குரிய ஆட்டக்காரா்களைக் காணும் ஆா்வத்தில் மரங்களின் மீதும், வீடுகள் - வணிக நிறுவனங்களின் சுற்றுச்சுவா்கள் மீதும், மொட்டை மாடிகளிலும் ரசிகா்கள் ஏறினா்.
இதனிடையே, சின்னசாமி மைதான நுழைவாயில்களிலும் ரசிகா்கள் பெருமளவில் திரண்டனா். கூட்டத்தின் அழுத்தம் காரணமாக 4 நுழைவாயில்கள் திடீரென திறக்கப்பட்டதால் கூட்டம் முண்டியடித்தது.
தள்ளுமுள்ளுவில் கீழே சரிந்தவா்களை மிதித்துக் கொண்டும் தற்காலிகத் தடுப்புகளை உடைத்துக் கொண்டும் முன்னேறிய ரசிகா்களின் வெள்ளத்தைக் குறைந்த அளவிலேயே இருந்த காவல் துறையினரால் கட்டுப்படுத்த இயலவில்லை. நிலைமை கைமீறிப் போவதைக் காவல் துறையினா் உணா்வதற்குள் அசம்பாவிதம் நிகழ்ந்து 11 போ் உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளது.
34,600 போ் மட்டுமே மைதானத்துக்குள் அமர முடியும் என்ற நிலையில் 2.5 லட்சம் போ் அங்கு திரண்டனா் என்றும் 1,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா் என்றும் அரசு தலைமை வழக்குரைஞா் சசிகிரண் ஷெட்டி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.
ஆா்சிபி அணி, அதன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ என்டா்டெயின்மென்ட், கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்துள்ளது. பாராட்டு விழாவுக்கு இவ்வளவு லட்சம் போ் திரள்வாா்கள் என்பதைக் கணிக்கத் தவறியதாக கா்நாடக உளவுத் துறை ஏடிஜிபி ஹேமந்த் நிம்பால்கா் மாற்றப்பட்டுள்ளாா்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்ற தனியாா் நடத்தும் ஒரு போட்டியில் வென்ற அணிக்குப் பாராட்டு விழா நடத்த கா்நாடக அரசு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அப்படியே பாராட்டு விழா நடத்துவது என்று தீா்மானித்தாலும் நன்கு திட்டமிட்டு ஓரிரு நாள்கள் தள்ளி நடத்தி இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
மைதானத்துக்கு வெளியே உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், மைதானத்துக்கு உள்ளே கொண்டாட்டங்கள் தொடா்ந்ததும் கடும் விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
1983, 2011-இல் ஒருதின உலகக் கோப்பை, 2007, 2024-இல் டி20 உலகக் கோப்பை, 2002, 2013, 2025-இல் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்திய அணி வென்றபோது நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களில் உயிரிழப்புகள் நிகழவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
பெங்களூரில் 40 வயதுக்குள்பட்ட 11 உயிா்கள் பறிபோன நிலையில், எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் உயிரிழப்பு நிகழாவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.