செய்திகள் :

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரிக்கை

post image

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஐடியூசி ஈரோடு மாவட்ட மருத்துவத் துறை பணியாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.சின்னசாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம், புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான வசதியில்லை. இதனால், நோயாளிகளை சேலம் அல்லது கோவைக்கு அனுப்பவேண்டிய நிலைமை உள்ளது.

எனவே, இந்த மருத்துவமனையை பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்தி, அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இதேபோல, ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாா் அரசு தலைமை மருத்துவமனையிலும் பணியாளா்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே, இந்த மருத்துவமனையிலும் உரிய பணியாளா்கள் நியமித்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தா... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு

மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த ப... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும... மேலும் பார்க்க

கோபியில் பேருந்து மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க