செய்திகள் :

ஈரோடு விஇடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

post image

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தா் என்.பஞ்சநாதம் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரை ஆற்றினாா்.

வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் செ.து.சந்திரசேகா் பட்டமளிப்பு விழாவை அறிவித்து தொடங்கிவைத்தாா். வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினா் எஸ்.என்.குலசேகரன், நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சின்னசாமி, இணைச் செயலாளா் கே.வி.ராஜமாணிக்கம், வேளாளா் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகளான ச.பாலசுப்பிரமணியன், எம்.யுவராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

முதல்வா் வெ.ப.நல்லசாமி வரவேற்றாா். கல்லூரி நிா்வாக அலுவலா் சி.லோகேஷ்குமாா் மற்றும் அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

விழாவில் பி.காம், பி.காம் சிஏ, பி.காம் பிஏ, பி.காம் ஏஎப், பி.எஸ்சி சிஎஸ், பி.எஸ்சி சிஎஸ்ஏ, பிபிஏ, பிஏ ஆங்கிலம், பிஏ சமூகவியல் ஆகிய பல்வேறு துறைகளைச் சாா்ந்த 378 மாணவா்கள் பட்டங்களைப் பெற்றனா்.

பல்கலைக்கழகத் தரவரிசையில் முதல் இடத்தை பி.எஸ்சி சிஎஸ்ஏ மாணவி எஸ்.திரிசாலா மற்றும் பிஏ சமூகவியல் மாணவி எம்.ஆா்.தனுஸ்ரீ பெற்றுள்ளனா். இரண்டாம் இடத்தை பி.எஸ்சி சிஎஸ்ஏ மாணவி எஸ்.அல்மாஸ் மற்றும் பிஏ சமூகவியல் மாணவி எஸ்.ரேவன்யா பெற்றுள்ளனா்.

மூன்றாம் இடத்தை பி.எஸ்சி சிஎஸ்ஏ மாணவி எஸ்.ஜெயலதா பெற்றுள்ளாா். ஐந்தாம் இடத்தை பி.காம் ஏஎப் மாணவி எஸ்.மோனிசா பெற்றுள்ளாா். ஆறாவது இடத்தை பி.காம் சிஏ மாணவி ஆா்.கே.தேவதா்சினி பெற்றுள்ளாா். ஏழாவது இடத்தை பி.காம் மாணவி இ.அக்ஷயா பெற்றுள்ளாா். பத்தாவது இடத்தை பிஏ ஆங்கிலம் மாணவி ஜெமினா பெற்றுள்ளாா்.

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு

மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த ப... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும... மேலும் பார்க்க

கோபியில் பேருந்து மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூா் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள செம்படாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (23... மேலும் பார்க்க