செய்திகள் :

பைக் இல்லையா..? அப்போ வரதட்சிணையாக சிறுநீரகம் வேண்டும்..! மருமகளை அதிர்ச்சியடைய வைத்த மாமியார்!

post image

பிகாரில் வரதட்சிணையாக மருமகளி்ன் சிறுநீரகத்தை கேட்டு மாமியார் ஒருவர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்.

பைக், நகை தரமுடியாதா? அப்போது உன்னுடைய சிறுநீரகத்தை வரதட்சிணையாக கொடுக்க வேண்டும் என மாமியார் ஒருவர் கேட்டிருக்கிறார். இது நம்பமுடியாததாக இருக்கலாம். ஆனால்..

ஆம், வடக்கு பிகாரில் உள்ள முஸாபர்பூரில், தனது மகனுக்கு வரதட்சிணையாக சிறுநீரகத்தைக் கேட்டவர் மற்றும் அவரது உறவினர்கள் நடத்திய வினோதமான சம்பவம் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பாக தீப்தி என்ற பெண் முஸாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனக்கு நேர்ந்த கொடுமையை தீப்தி காவல் துறையினரிடம் கூறுகையில், “எனக்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது மாமியாரின் வீடு முஸாபர்பூரில் இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு ஆரம்பத்தில் எல்லாம் சுமுகமாகத்தான் நடந்து வந்தது.

பின்னர் என்னுடைய மாமியார் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கினர். எனது பெற்றோர் வீட்டிலிருந்து ஒரு பைக் மற்றும் பணத்தை கொண்டு வரச் சொல்லியும் மிரட்டினர்.

எனது திருமணமான இரண்டு வருடங்களுக்குப் பிறகு, என்னுடைய கணவரின் சிறுநீரகக் கோளாறு பற்றி எனக்குத் தெரியவந்தது. அதனால், நகை, பைக் எதுவும் கொடுக்க முடியவில்லை என்றால், உன்னுடைய சிறுநீரகத்தைக் கொடுக்க வேண்டும் என எனது மாமியார் தொடர்ந்து மிரட்டினார். நான் தாக்கப்பட்டு, என் மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.

நான் பின்னர் என் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்றார் தீப்தி.

இரு தரப்பினருக்கும் இடையே காவல்துறையினர் சமாதானம் செய்ய முயன்றனர், ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் தீப்தி கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கணவர் அதற்கு உடன்படவில்லை.

பின்னர், மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரது கணவர் உள்பட அவரது மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தேனிலவு வழக்கு: கொலைக் குற்றவாளியை கன்னத்தில் அறைந்த விமானப் பயணியால் பரபரப்பு!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! நண்பரை இழந்து வாடும் பிரதமர் மோடி!

குஜராத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் பலியான நிலையில், பலியானோர்க்கு ப... மேலும் பார்க்க

தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்! ஏன்?

தாய்லாந்திலிருந்து தில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் புக்கெட் நகரத்திலிருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் பஸ் ஏ320 பயணிகள் விமானம் இன்று... மேலும் பார்க்க