செய்திகள் :

பொம்மை துப்பாக்கியைக் காட்டி நகை கடையில் கொள்ளையடித்த ராணுவ வீரர் கைது!

post image

தில்லியில் பொம்மைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி நகை கடையைக் கொள்ளையடித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தில்லி ஃபார்ஷ் பஜாரில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஜூலை 19 ஆம் தேதி நகை கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சிசிடிவியைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கொள்ளையன் கைது

தில்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்தது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கெளரவ் யாதவ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய பிரதேசத்துக்கு விரைந்த தனிப்படை காவலர்கள் கெளரவ் யாதவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

மேலும், கெளரவ் யாதவ், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் என்பதும் விடுமுறையில் வந்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்த அவர், 2025 இல் பயிற்சியை முடித்து, பஞ்சாபில் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

கொள்ளை ஏன்? திட்டமிட்டது எப்படி?

கெளரவ் யாதவை கைது செய்த தில்லி காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு கொள்ளை குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

தில்லி காவல்துறை துணை ஆணையர் கூறியதாவது:

”பஞ்சாபில் பணியில் இருந்த கெளரவ் யாதவுக்கு விடுமுறை கிடைத்த நிலையில், கடந்த ஜூலை 18 ஆம் தேதி மத்திய பிரதேசம் செல்லும் ரயிலுக்காக தில்லியில் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் கொள்ளை அடிப்பதற்கான திட்டத்தை தீட்டியுள்ளார். சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

தில்லியில் உள்ள ஒரு கடையில் பொம்மை துப்பாக்கியை வாங்கிய கெளரவ், நகை கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அவரிடம் இருந்து நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Police have arrested a Border Security Force soldier for robbing a jewelry store in Delhi using a toy gun.

இதையும் படிக்க : இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் பதவி: தோ்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா். மத்திய சட்டம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களவை துணைத... மேலும் பார்க்க

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க