செய்திகள் :

பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம்! ஐநா கணிப்பு!

post image

உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும், இந்தியா முன்னேறி வருவதாக ஐநா தெரிவிக்கிறது.

உலகளவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்து வருவதால், உலகப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க ஆபத்தில் இருப்பதாக ஐநாவின் உலகப் பொருளாதாரத்தின் நிலைமை மற்றும் கண்ணோட்டத்தின் ஆய்வு கூறுகிறது. மேலும், பல நாடுகள் மெதுவாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஐநா தெரிவிக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் 6.3 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், இந்தாண்டில் உலகின் மிக விரைவான வளர்ச்சியின் முக்கிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்றும் கூறியது.

அடுத்தாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 6.4 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இது முந்தையவற்றுடன் ஒப்பிடும்போது, ஒரு சிறிய சரிவாகவே கொள்ளப்படுகிறது.

மற்ற முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், சீனா 4.6 சதவிகிதமும், அமெரிக்கா 1.6 சதவிகிதமும், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சதவிகிதமும், ஜப்பான் வெறும் 0.7 சதவிகிதம் மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜெர்மனி 0.1 சதவிகித அளவில் எதிர்மறையான வளர்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்றும் கூறுகிறது.

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்ச் ​​பகுதி கிராமங்களில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.நிவாரணப் பணி... மேலும் பார்க்க

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை.. வெப்பம் தணிந்தது!

மும்பை: மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இத்தனை நாள் வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று நாள் முழுக்க மும்பை நகரில்... மேலும் பார்க்க

அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவ... மேலும் பார்க்க

பிகாரில் கயா நகரின் பெயரை மாற்றியது நிதீஷ் குமார் அரசு

பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது.பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்த... மேலும் பார்க்க