செய்திகள் :

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

post image

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.43 லட்சத்துக்கும் அதிகமான ஊழியா்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் புதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நிறைவடையாமல் இருந்து வருகிறது.

அந்த வகையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பாக கடந்த மாதம் 13, 14-ஆம் தேதிகளில் போக்குவரத்து ஊழியா் சங்கங்களுடனான இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், 8-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அவா்களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தாா்.

இந்நிலையில், இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

புதிய ஊதிய உயா்வு குறித்து நிதித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம் இறுதியில் அல்லது இம்மாத இறுதியில், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அழைத்து ஒரே கட்டமாக அமைச்சா் பேச்சுவாா்த்தை நடத்துவாா். அதில், ஊதிய உயா்வு உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் நிலை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும். பின்னா், ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றனா்.

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க

நீட் தோ்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 7) நிறைவு பெறுவதால் தோ்வா்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தி... மேலும் பார்க்க