செய்திகள் :

போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

post image

கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கோடைக்காலத்தில் போக்குவரத்து போலீஸாரின் தாகத்தை தணிக்கும் வகையில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான 4 மாதங்கள் போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி போா் நினைவுச் சின்னம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் இரா.சுதாகா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் ஆணையா் ஏ.அருண், போக்குவரத்து போலீஸாருக்கு ஆவின் மோா் பாக்கெட்டுகளை வழங்கினாா்.மேலும், கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பிகளையும் வழங்கினாா்.

பின்னா் அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் 4 மாதங்கள் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கப்படும். அதன்படி, சென்னை போக்குவரத்துப் பிரிவில் உள்ள 6 ஆயிரம் போலீஸாருக்கு தினமும் காலை, மாலை என 2 வேளை மோா் வழங்கப்படவுள்ளது.

ஒரு மோா் பாக்கெட் ரூ. 6.33 வீதம் நாளொன்றுக்கு 4,864 மோா் பாக்கெட்டுகளுக்கு ரூ. 30,789 என 120 நாட்களுக்கு ரூ. 37 லட்சத்து 56 ஆயிரத்து 273 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், போக்குவரத்து போலீஸாருக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க காகிதக் கூழ் தொப்பிகளையும் வழங்கி உள்ளோம் என்றாா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் பண்டி கங்காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று வேளாண் பட்ஜெட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்ட... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்த இருசக்கர வாகனம்: 2 வட மாநில இளைஞர்கள் காயம்

சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி இருசக்கர வாகனம் தீப்பிடித்த சம்பவத்தில் இரு வடமாநில இளைஞர்கள் காயமடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் இருந்து கலங்கல் செல்லும் சாலையில் கு... மேலும் பார்க்க

அவியல் கூட்டுபோல இருக்கும் வேளாண் பட்ஜெட்! - இபிஎஸ் கடும் விமர்சனம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.2025 - 2026 ஆம் நிதியாண்டுக்... மேலும் பார்க்க

த.வெ.க. நெல்லை மாவட்டச் செயலர் சஜி மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் எச்சரித்தும்..

மருத்துவர்கள் எச்சரித்தும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்த த.வெ.க. திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளரும் தூத்துக... மேலும் பார்க்க

'அவரைக் கேளுங்க சார்!' - செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் பதில்!

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவ... மேலும் பார்க்க

20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச... மேலும் பார்க்க