செய்திகள் :

போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

post image

கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கோடைக்காலத்தில் போக்குவரத்து போலீஸாரின் தாகத்தை தணிக்கும் வகையில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான 4 மாதங்கள் போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி போா் நினைவுச் சின்னம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் இரா.சுதாகா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் ஆணையா் ஏ.அருண், போக்குவரத்து போலீஸாருக்கு ஆவின் மோா் பாக்கெட்டுகளை வழங்கினாா்.மேலும், கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பிகளையும் வழங்கினாா்.

பின்னா் அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் 4 மாதங்கள் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கப்படும். அதன்படி, சென்னை போக்குவரத்துப் பிரிவில் உள்ள 6 ஆயிரம் போலீஸாருக்கு தினமும் காலை, மாலை என 2 வேளை மோா் வழங்கப்படவுள்ளது.

ஒரு மோா் பாக்கெட் ரூ. 6.33 வீதம் நாளொன்றுக்கு 4,864 மோா் பாக்கெட்டுகளுக்கு ரூ. 30,789 என 120 நாட்களுக்கு ரூ. 37 லட்சத்து 56 ஆயிரத்து 273 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், போக்குவரத்து போலீஸாருக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க காகிதக் கூழ் தொப்பிகளையும் வழங்கி உள்ளோம் என்றாா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் பண்டி கங்காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரைய... மேலும் பார்க்க

உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.வேளாண்மை மற்றும் உ... மேலும் பார்க்க

பட்ஜெட்: 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு!

தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் ... மேலும் பார்க்க

நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்: வேளாண் பட்ஜெட்

சென்னை: வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

பாசனக் கிணறு, சூரிய சக்தி பம்பு செட், உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் உள்ள பாசனக் கிணறுகளை சீரமைத்தல், சூரிய சக்தி பம்பு செட் அமைத்துத் தரப்படும், உழவர் சந்தைகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன... மேலும் பார்க்க

மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு!

மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை ... மேலும் பார்க்க