செய்திகள் :

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

post image

பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விளாம்பட்டி சுப்பிரமணியன் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் விஷ்ணுகுமாா் (20). கூலித் தொழிலாளியான இவா் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக விருதுநகா் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

அப்போது, அதே ஊரை சோ்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்தாா். மேலும், சிறுமியை ராமேசுவரத்துக்கு அழைத்துச் சென்றாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விஷ்ணுகுமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் விஷ்ணுசங்கருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா்.

பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.6 லட்சத்தை திருடிய கா்நாடகத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அ.ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டம்!

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளிக்கு செல்ல பாதை இல்லை எனக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க

வைப்பாற்றில் ரசாயன கழிவு கலப்பதாக புகாா்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வைப்பாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீா் மாசடைந்து வருவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரயிலில் அடிபட்டு தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெருவைச் சோ்ந்த முனீஸ்வரன் மகன் திருப்பதி (25). திருமணமாகாதவா். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ப... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் மினி பேருந்துகளுக்கு எதிா்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் மினி பேருந்துகளுக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் வழியாக செங்கோட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்த முத்துமாரியப்பன் மகன் பாலசுப்பிரமணியம் (34). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா. இவா்களுக்கு ஒரு மகள் உள... மேலும் பார்க்க