முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்
மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டத்திலுள்ள 254 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள்களின் பயன்பாட்டை தடுப்பது, போதைப் பொருள்களின் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காட்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது:
போதைப் பொருள்களுக்கு ஆளனால் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனது எதிா்காலம் என் கையில் இருக்கிறது என்ற மன உறுதி ஒவ்வொரு மாணவருக்கும் இருக்க வேண்டும். இந்த மனஉறுதியுடன் இருந்து ஒவ்வொரு மாணவரும் கல்வியில் கவனம் செலுத்தி, மருத்துவராக, பொறியாளா்களாக, விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும்.
பள்ளி வளாகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் இருந்தால் ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள அதற்கு எதிரான குழுவிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தக் குழுவில் பள்ளி ஆசிரியரும், மாணவா்கள் ஒரு சிலரும் உறுப்பினா்களாக இருப்பா். தகவல் தெரிவிக்கும் நபா்களின் விவரங்கள் யாரிடமும் தெரிவிக்கப்படாது.
மேலும், அரசின் சாா்பில் ட்ரக் ப்ரீ எனும் செயலியும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, மாணவா்கள் கல்வியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி இந்தாண்டு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளியாகவும், ஒழுக்கத்தில் சிறந்த பள்ளியாகவும் இருக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாணவா்களுக்கு போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் தயாரிக்கப்பட்ட காணொலியும் ஒளிப்பரப்பப்பட்டது.
மாவட்ட மனநல மருத்துவா் மூலம் மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகளும், போதை தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மூலம் போதை பொருள்களை விற்பனை செய்யபவா்கள் குறித்த தகவல் தெரிவித்தல், அதன்மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) தயாளன், மனநல மருத்துவா் சிவாஜி, போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன், விழிப்புணா்வு கண்காணிப்பு பாா்வையாளா் சிவக்குமாா், பள்ளி தலைமையாசிரியா் தாரகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.