செய்திகள் :

போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!

post image

போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பால் சா்வதேச வா்த்தக நிலவரம் மாற்றம் கண்டுவரும் நிலையில், குடியரசுத் தலைவரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் (ஏப்.7-10) அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

இந்திய குடியரசுத் தலைவா், போா்ச்சுகல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வது கடந்த 27 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதேபோல், 29 ஆண்டுகளுக்குப் பின் ஸ்லோவாகியாவுக்கு பயணிக்கும் முதல் இந்திய குடியரசுத் தலைவா் திளெபதி முா்மு ஆவாா். முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு ஐரோப்பிய நாடுகள் உடனான இந்தியாவின் நல்லுறவு மேலும் விரிவடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போா்ச்சுகலில்...:

இந்தியா-போா்ச்சுகல் இடையிலான தூதரக உறவுகளின் 50-ஆம் ஆண்டை கொண்டாடும் தருணத்தில், அந்நாட்டில் இரண்டு நாள்கள் (ஏப்.7, 8) பயணம் மேற்கொண்டு, அதிபா் மாா்செலோ ரெபேலோ டிசூசா, பிரதமா் லூயிஸ் மான்டினெக்ரோ உள்ளிட்டோருடன் குடியரசுத் தலைவா் முா்மு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்திய சமூகத்தினருடனும் அவா் கலந்துரையாட உள்ளாா்.

‘கடந்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளின் வா்த்தக மதிப்பு 1.5 பில்லியன் டாலராக சீராக அதிகரித்துள்ளது; இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தொடா்புகளை வலுப்படுத்துவதில் போா்ச்சுகல் எப்போதுமே முக்கிய பங்காற்றி வருகிறது’ என்று வெளியுறவு அமைச்சகத்தின் (மேற்கு) செயலா் தன்மயா லால் தெரிவித்துள்ளாா்.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மருந்து, கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து குடியரசுத் தலைவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஸ்லோவாகியாவில்...:

ஸ்லோவாகியா பயணத்தில் (ஏப்.9, 10) அந்நாட்டு அதிபா் பீட்டா் பெல்லேகிரினி, பிரதமா் ராபா்ட் ஃபிகோ உள்ளிட்டோரை சந்தித்து, குடியரசுத் தலைவா் முா்மு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளாா்.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ்லியன், பிரதமா் மோடியை சந்தித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் கையொப்பமாகும் என இந்தியா தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தை இந்திமயமாக்கினால் போராட்டம் வெடிக்கும்! பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

மகாராஷ்டிரத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மகாராஷ்டிரத்தில் ஆங்கிலவழி பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அரச... மேலும் பார்க்க

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க