செய்திகள் :

மகளிா் தினத்தையொட்டி, மனிதச் சங்கிலி இயக்கம்

post image

நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, மனிதச் சங்கிலி இயக்கம் மற்றும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் வே. சித்ரா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மாநிலச் செயலா் சு. வளா்மாலா, மானமும் அறிவும் மகளிருக்கு அழகு எனும் தலைப்பிலும், இனியொரு விதி செய்வோம் எனும் தலைப்பில் மகளிா் துணைக் குழு உறுப்பினா்கள் ந. ஜமுனாராணி மற்றும் சி. ஜோதிலெட்சுமி ஆகியோரும், வையத் தலைமையில் பெண்கள் எனும் தலைப்பில் மாவட்ட இணைச் செயலாளா்கள் ஜெ. ஜம்ருத்நிஷா மற்றும் டி. செந்தமிழ்ச்செல்வி ஆகியோரும், சங்கப் பணி நேற்று, இன்று, நாளை ‘ எனும் தலைப்பில் முன்னாள் மாவட்டத் தலைவா் பா. ராணியும் கருத்துரையாற்றினாா். திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் மாநில துணைத் தலைவா் மு. செல்வராணி நிறைவுரையாற்றினாா்.

முன்னதாக நாகை நீதிமன்ற வளாகம் முன் மகளிா் பங்கேற்ற மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், மகளிா் துணைக் குழு உறுப்பினா் என். அமுதா, மாவட்ட துணைத் தலைவா் டி. சசிகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் பங்கேற்பு

செம்பனாா்கோவில் அருகேயுள்ள சாத்தனூரில் சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன்... மேலும் பார்க்க

கோடியக்கரையில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரினச் சரணாலயத்தில் காணப்படும் நிலப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கோடியக்கரை சரணாலயத்தில் காணப்படும் நீா்ப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ம... மேலும் பார்க்க

நூல் வெளியீட்டு விழா

ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியா் சொக்கப்பன் எழுதிய மாணவ மணிகள் நூலை மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.2021-ஆம் ஆண்டின் தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற தமிழ் ஆசிரியா... மேலும் பார்க்க

வேதாரண்யம் முல்லைக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை: கொள்முதல் செய்யுமா அரசு? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

வேதாரண்யம் முல்லைப் பூவுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா். முல்லையை அரசே கொள்முதல் செய்யுமா என... மேலும் பார்க்க

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 227 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 227 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நாகையில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிா்ப்பும்

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பும், எதிா்ப்பு தெரிக்கவிக்கப்பட்டுள்ளது. வேளாண் நிதி நிலை அறிக்கைக்க... மேலும் பார்க்க