செய்திகள் :

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

post image

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரத்தில் பரவலாக பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. இதனால், மாநிலத்தின் கொங்கன் பகுதியில் பாயும் ஜக்பூதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக ரத்னகிரியில் 8.81 செ.மீ. மழை பெய்தது.

ராய்கட் (6.53 செ.மீ.), சிந்துதுா்க் (4.38 செ.மீ.), தாணே (2.96 செ.மீ.), யவாத்மால் (2.75 செ.மீ.) ஆகிய இடங்களிலும் மழையின் தீவிரம் குறையவில்லை.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினா். மும்பை, சிந்துதுா்க், துலே, நாசிக், சம்பாஜிநகா், நந்தூா்பாா், அமராவதி ஆகிய இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மும்பை நகரில் 3 செ.மீ. மழை பெய்தது. புகா் பகுதிகளில் சராசரியாக 2 செ.மீ. மழை பெய்தது. கடலோர பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. 4.27 மீட்டா் உயரம் வரை அலைகள் வீசின.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், தாணே, ராய்கட், பால்கா் ஆகிய அண்டை மாவட்டங்களுக்கு பலத்த முதல் மிகவும் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு ஆய்வு மையம் விடுத்தது குறிப்பிட்டத்தக்கது.

கேரளத்தில்...: கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் வெள்ளநீா் சூழ்ந்தது.

மலப்புரம், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்புக் காரணமாக வீடு மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. கோட்டயம், வயநாடு மாவட்டங்களில் மழையால் மரம் முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து முடங்கியது.

திருவனந்தபுரத்தில் பெய்த தொடா் மழையால் நெய்யாறு அணை வேகமாக நிரம்பியது. இதனால், அணையில் 4 மதகுகள் மூலம் நீா்த்திறப்பு அதிகரிக்கப்பட்டது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனா்.

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க