செய்திகள் :

மகாளய அமாவாசை: பேரூர் படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

post image

மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதை யொட்டி கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ள நொய்யல் ஆற்றுப் படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு, உறவினர்கள் திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகிய அமாவாசை நாள்களில் கோவை உள்பட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பேரூர் படித் துறைக்கு திரண்டு வந்து இறந்து போன தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்கின்றனர்.

இதன் மூலம் இறந்த முன்னோர்களுடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பேரூர் நொய்யல் படித்துறையில் அமர்ந்து அரிசி, பருப்பு, காய்கறி, எள் சாதம் ஆகியன படையல் வைத்து, இறந்த போன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழிபாடு நடத்தினால், தங்களுக்கு தோஷம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதுவரை வழங்கப்பட்ட ஹெச்-1பி விசாக்களில் 71 - 72% இந்தியர்கள்!

மகாளய அமாவாசையையொட்டி ஞாயிறு அதிகாலையில் இருந்தே பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் நொய்யல் ஆற்றின் படித் துறையில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண கொடுத்து வழிபாடு செய்தனர். புதிதாக கட்டப்பட்ட தர்ப்பணம் மண்டபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து பக்தர்கள் பேரூர் கோயிலுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்து இருந்து நெய் விளக்கேற்றி, சாமி தரிசனம் செய்தனர். மகாளய அமாவாசையையொட்டி பேரூர் நொய்யல் படித்துறை, பேரூர் பட்டீசுவரர் கோயில் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Thousands of people gathered at the Perur river bank in Coimbatore to offer 'Tharpanam' and prayers to their ancestors on the occasion of Mahalaya Amavasai.

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளி... மேலும் பார்க்க

செப்.23இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

வரும் 23ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. ம... மேலும் பார்க்க

தவெகவுக்கான மக்கள் ஆதரவு கண்டு பிறருக்கு அச்சம்: விஜய்

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன் என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டையே முக்காடு போட வைப்பார்: இபிஎஸ் மீது பொன்முடி விமர்சனம்

அதிமுக 5 கட்சிகளாகப் பிரிந்து போயிருப்பதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுகையில், ``தமிழ்நாட்டைத் தலைகுனிய வைப்பத... மேலும் பார்க்க

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடியில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சங... மேலும் பார்க்க

போலீஸும் ரெளடியும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! தலைமைக் காவலர் கைது!

கரூரில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தலைமைக் காவலரை, போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரெளடியை தேடி வருகின்றனர். கரூர் தொழிற்ப... மேலும் பார்க்க