செய்திகள் :

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

post image

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்டுமென பிசிசிஐ-இடமும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ரசிகர்களின் ஆதரவினால்தான் கம்பீர் பயிற்சியாளர் ஆனதும் கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணிக்காக ஷ்ரேயாஸ் ஐயர் வென்று கொடுத்தும் கவனிக்கத்தக்கது.

சையத் முஷ்டக் அலி தொடரில் ஷ்ரேயாஸ் தலைமையில் கோப்பை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பிசிசிஐ ஒப்பந்தம் இல்லாமல் இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதையும் ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் வென்றார்.

தில்லி, கேகேஆர் அணியை வழிநடத்தி இறுதிப் போட்டிக்கு கொண்டுவந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் அணியையும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லுவார் என எதிர்பார்க்கப்படடுகிறது.

முலான்புரில் நேற்று (ஏப்.15) நடைபெற்ற போட்டியில் 111 ரன்களை கட்டுப்படுத்தி வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். இது சாதாரண விஷயமல்ல என்றும் அவரது கேப்டன்சி (தலைமைப் பண்பு)தான் காரணம் என்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஷ்ரேயாஸின் தலைமைப் பண்பினைப் பாராட்டி வருகிறார்கள்.

முந்தைய போட்டியில் தோல்வியுறும்போது, “பந்துவீச்சாளர்களை சரியாக மாற்றி கொடுத்திருக்கலாம்” என தனது தவறை ஒப்புக்கொண்டதும் பலரால் பாராட்டப்பட்டு வருகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை ஷ்ரேயாஸ் தலைமையில் வென்றால் இந்திய அணிக்கும் அவர் கேப்டனாகுவார் என்பதில் அவரது ரசிகர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்

பெங்களூரில் நேற்றிரவு மழையின் காரணமாக 14 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 95/9 ரன்கள் எடுத்தது.அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 98/5 ரன்கள் எடுத்து வெற்றி... மேலும் பார்க்க

100-ஆவது ஐபிஎல் போட்டியில் ராகுல் தெவாதியா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடுகிறார். ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அற... மேலும் பார்க்க

குஜராத் பந்துவீச்சு: தில்லி அணியில் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கம்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கருண... மேலும் பார்க்க

ஆர்சிபியில் இல்லாவிட்டாலும் சின்னசாமி திடலில் தொடரும் சஹாலின் ஆதிக்கம்!

ஆர்சிபி அணிக்கு பெங்களூரிலுள்ள சின்னசாமி திடல்தான் ஹோம் கிரௌண்டாக (சொந்தத் திடல்) இருக்கிறது. இந்தத் திடலில் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். ஆர்சிபி அணியில் 2014- 2021வரை ... மேலும் பார்க்க

தோல்விலும் ஆட்ட நாயகனான ஆர்சிபி வீரர்: டிம் டேவிட் புதிய சாதனை!

பெங்களூரில் நேற்றிரவு மழையின் காரணமாக 14 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 95/9 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் மற்றொரு இளம் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரர் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் ... மேலும் பார்க்க