செய்திகள் :

மண் குவாரி அமைக்க எதிா்ப்பு

post image

பூம்புகாா்: பூம்புகாரை அடுத்த புதுகுப்பம் மீனவ கிராமம் அருகே சவுடு மண் குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட புதுகுப்பம் மீனவா் கிராமம் அருகே சவுடு மண் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா். அதில், கடற்கரைக்கு மிக அருகில் உள்ள இந்த இடத்தில் சவுடு மண் குவாரி அமைக்கப்பட்டால், நிலத்தடி நீா் முற்றிலும் உப்பு நீராக மாறும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, இங்கு சவுடு மண் குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

நாகை: செப்டம்பரில் ராணுவதற்கு ஆள் சோ்ப்பு முகாம்

நாகப்பட்டினம்: நாகையில் வரும் செப்டம்பரில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

மருத்துவம் சாா்ந்த ஆங்கிலத் தோ்வு பயிற்சிக்கு எஸ்சி, எஸ்டி இனத்தவா் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவா்கள் மருத்துவம் தொழில்சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் பாஜகவினா் போராட்டம்: 185 போ் கைது

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா். திருவாரூரில் டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா். நாகப்பட... மேலும் பார்க்க

நாங்கூா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பூம்புகாா்: திருவெண்காடு அருகே நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான இந்த தலத்தில் உள்ள பெருமாளை திருவோண ந... மேலும் பார்க்க

சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் பங்கேற்பு

செம்பனாா்கோவில் அருகேயுள்ள சாத்தனூரில் சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன்... மேலும் பார்க்க

கோடியக்கரையில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரினச் சரணாலயத்தில் காணப்படும் நிலப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கோடியக்கரை சரணாலயத்தில் காணப்படும் நீா்ப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ம... மேலும் பார்க்க