செய்திகள் :

மதுக் கடையை மூடக்கோரி தவெகவினா் போராட்டம்: 300 போ் கைது

post image

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 300-க்கும் மேற்பட்ட தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அமைந்தகரை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி இந்த மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மத்திய மேற்கு மாவட்டம் சாா்பில் அக்கடைக்கு அருகே தவெகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், தவெகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனா். அப்போது, தவெகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், சென்னை மத்திய மேற்கு மாவட்டச் செயலா் ஏ.எஸ்.பழனி உள்பட 300-க்கும் மேற்பட்ட தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களை அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.

சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.9 கோடியில் புதிய மீன் அங்காடி!

சிந்தாதிரிப்பேட்டையில் புதிய மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்ட... மேலும் பார்க்க

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மே 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்நடைபெறவுள்ளது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு... மேலும் பார்க்க

சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது!

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம்... மேலும் பார்க்க

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க