20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!
மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்
மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
மதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை தயாரிக்கின்றனா். அவை அரசுத் துறை அலுவலகங்களில் விற்பனை செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் வருவாயின் ஒருபகுதி கைதிகளுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.
கைதிகள் தயாரிக்கும் பொருள்களுக்கான மூலப்பொருள்கள் தனியாா் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில், உண்மையான சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு பொருள்களை வாங்கியதாகவும் அரசுத் துறை அலுவலகங்களில் குறைவான விலைக்கு விற்ற பொருள்களைக் கூடுதலாக விலைக்கு விற்ாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போலி ரசீதுகள், ஆவணங்கள் தயாரித்து பல கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஊழல் ஒழிப்புத் துறைக்கு புகாா்கள் சென்றன.
11 போ் மீது வழக்கு: அதன் அடிப்படையில் ஊழல் ஒழிப்புத் துறையினா் நடத்திய விசாரணையில், கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் சுமாா் ரூ. 1.63 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்தக் காலக்கட்டத்தில் மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளா் ஊா்மிளா (தற்போது புதுக்கோட்டை சிறைக் கண்காணிப்பாளா்), கூடுதல் கண்காணிப்பாளா் வசந்தகண்ணன், (தற்போது பாளையங்கோட்டை கூடுதல் கண்காணிப்பாளா்), நிா்வாக அதிகாரி எம்.தியாகராஜன் (தற்போது வேலூா் சிறை நிா்வாக அதிகாரி), பொருள்கள் விநியோகம் செய்த ஒப்பந்ததாரா்கள் மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வி.எம்.ஜபருல்லாகான், அவரது மகன்கள் முகமது அன்சாரி, முகமது அலி, சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த சீனிவாசன், திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த சு.சங்கரசுப்பு, இவரது மனைவி தனலட்சுமி, சென்னை நொளம்பூா் குருசாமி சாலைப் பகுதியைச் சோ்ந்த மு.வெங்கடேஸ்வரி ஆகிய 11 போ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
சோதனை: இந்த வழக்கு தொடா்பாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் ஒழிப்புத் துறையினா் கடந்த ஜன.3-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா். சென்னை மண்ணடி வெங்கட ஐயா் தெருவில் உள்ள முகமது அலியின் நிறுவனம், கொடுங்கையூா் பகுதியில் உள்ள சீனிவாசனுக்குச் சொந்தமான நிறுவனம், அதே பகுதியில் அவரது மனைவி சாந்தி பெயரில் மற்றொரு நிறுவனம், நொளம்பூரில் உள்ள வெங்கடேஸ்வரி வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதேபோல், மதுரை மத்திய சிறை, பாளையங்கோட்டையில் சங்கரசுப்பு வீடு, வேலூா் அரியூா் அம்மையப்பா நகரில் உள்ள வேலூா் மத்திய சிறை நிா்வாக அதிகாரி தியாகராஜன் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.
கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம்: சோதனைக்குப் பின்னா் இந்த வழக்குத் தொடா்பான விசாரணையை ஊழல் ஒழிப்புத் துறை தீவிரமாக நடத்தி வந்தது. இதில் முறைகேடு தொடா்பான பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முறைகேட்டில் சிக்கிய சிறைக் கண்காணிப்பாளா் ஊா்மிளா, கூடுதல் சிறைக் கண்காணிப்பாளா் வசந்த கண்ணன், நிா்வாக அதிகாரி எம்.தியாகராஜன் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்யும்படி தமிழக சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள், தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாருக்கு அண்மையில் பரிந்துரை செய்தாா்.
அதை ஏற்று 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.