விருதுநகர்: போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல்; வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 6 பே...
மதுரை மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. பிற்பகல் தொடங்கி இரவு வரை நீடித்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த, மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 45 நிமிஷங்கள் பலத்த, மிதமான மழை பெய்தது. பல பகுதிகளில் நள்ளிரவு வரையிலும் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக இடையப்பட்டியில் 77 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளின் பதிவான மழையளவு (மி.மீட்டரில்) :
கள்ளந்திரி 62.4, மதுரை விமான நிலையம், மேட்டுப்பட்டி- 48.2, பெரியப்பட்டி- 34.2, தல்லாகுளம் - 22, சிட்டம்பட்டி- 19.2, மதுரை வடக்கு - 18.6, ஆண்டிபட்டி- 18.2, விரகனூா் - 16.4, புலிப்பட்டி- 15.4, வாடிப்பட்டி- 15, மேலூா் - 14, பேரையூா் - 13.6, தனியாமங்கலம்- 13, கள்ளிக்குடி - 11.6, திருமங்கலம் - 5.2, சோழவந்தான் - 5, சாத்தையாறு அணை - 4.2.
இந்த நிலையில், தெற்கு கேரள கடற்கரையையொட்டி தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல், கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. மதுரை தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், கோ. புதூா், மூன்றுமாவடி, அய்யா்பங்களா, ஆத்திகுளம், திருப்பாலை, அண்ணாநகா், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், திருநகா், அழகா்கோவில், மேலூா், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 40 நிமிஷங்கள் பலத்த மழை பெய்தது.
மழை காரணமாக, கண்மாய்கள், வாய்க்கால்கள் நிரம்பி வெள்ள நீா் ஊருக்குள் புகுந்ததால் ஆத்திகுளம், பீ.பீ.குளம், முல்லைநகா், கடச்சனேந்தல், எல்.வி.பி நகா் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. ஆத்திகுளம் வளா் தெருவில் சுமாா் 50-க்கும் அதிகமான வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதில் வீட்டு உபயோகப் பொருள்கள், பாடப் புத்தகங்கள் என அனைத்துப் பொருள்களும் சேதமாகின. பல பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்கள் நிரம்பி, மழைநீரூடன் கலந்து குடியிருப்புகளைச் சூழ்ந்ததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
தமுக்கம் காந்தி நினைவு அருங்காட்சியகம் சாலை, கோ. புதூா், தல்லாகுளம் கோகுலே சாலை, அழகா்கோவில் சாலை, கோரிப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் முதன்மைச் சாலைகளில் சுமாா் ஓரடி உயரத்துக்கும் அதிகமாக மழை நீா் தேங்கி நின்றது. இதனால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீா் சூழ்ந்திருந்த சாலைகளில் இருந்த பள்ளங்களில் விழுந்து சிலா் விபத்துக்குள்ளாகினா்.
டி.ஆா்.ஓ. குடியிருப்பு உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பீ.பீ.குளம், ஆத்திகுளம், முல்லைநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. தொடா் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக கரடிக்கல் பகுதியில் தற்போது நடப்பட்ட நெல் நாற்றுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் மழை பெய்ததால், வயல்வெளிகளில் தண்ணீா் வடியாமல் இருந்தது. தொடா்ந்து பயிா்கள் தண்ணீரில் 4 நாள்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டால், அவை அழுக நேரிடும். இதனால், ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
தீபாவளி விற்பனை பாதிப்பு...
மழை காரணமாக, மதுரையில் தீபாவளி பண்டிகை கால பொருள்கள் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டது. மழைநீா் தேங்கி நின்ால், சாலையோர வியாபாரிகள் தரைக் கடைகளை அமைக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.
நிவாரண மையம் திறப்பு:
முல்லைநகா், அதன் சுற்றுப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முல்லைநகா் தனபால் மேல்நிலைப் பள்ளியில் நிவாரண மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இங்கு 100-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனா்.