செய்திகள் :

மதுரை: மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா - அடுத்த மேயர் யார்? திமுகவில் பரபரப்பு!

post image

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது மதுரை திமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி

அமைச்சர் பிடிஆரின் ஆதரவாளரான மேயர் தரப்பிற்கும், பெரும்பாலான திமுக கவுன்சிலர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு நீடித்து வந்தது. சமீபகாலமாக பிடிஆர் மேயர் கணவர் மீது அதிருப்தியுடன் இருந்தார்.

பலகோடி வரி முறைகேடு

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் பலகோடி ரூபாய் அளவுக்கு வரி முறைகேடு விவகாரம் பெரிய அளவில் எழுந்த நிலையில், அது தொடர்பான வழக்கில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஐந்து மண்டலத்தலைவர்கள், இரண்டு நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டனர். அப்போதே மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்வார் என்றும், அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நீக்கப்படுவார் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேல் சிறையிலிருந்து சமீபத்தில்தான் ஜாமீனில் வெளி வந்தார்.

மேயர் இந்திராணியுடன் கணவர் பொன் வசந்த்
மேயர் இந்திராணியுடன் கணவர் பொன் வசந்த்

ராஜினாமா கடிதம்

மேயர் இந்திராணிக்கு சமீபகாலமாக அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக நெருக்கடி ஏற்பட்டு வந்ததால் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் நேற்று அளித்தார்.

இந்த தகவல் பரவி மதுரை மாவட்ட திமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயரின் ராஜினாமா கடிதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள மாமன்ற கூட்டத்தில், துணை மேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சிலர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அடுத்த மேயர் அமைச்சர்கள் பி.மூர்த்தியின் ஆதரவாளரா, பிடிஆரின் ஆதரவாளரா? என்பதுதான் தற்போது திமுக-வினரிடம் பேச்சாக உள்ளது.

'1 அடி அடித்தால் 2 அடி கொடுப்பேன்; என்னிடம் மிரட்டல் வேண்டாம்' - அண்ணாமலை

கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கரூரில் 606 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஏடிஜிபி டேவிட்ச... மேலும் பார்க்க

``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்'' - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள்

நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்தும்' என்று பேசியிருந்தார். ராகுல் காந்தி பதிவு இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி த... மேலும் பார்க்க

"விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால்.!" - கூட்டணி குறித்து தமிழிசை

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். விஜய்க்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. கரூர் விஷயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் அரசாங்கம்... மேலும் பார்க்க

GD Naidu பாலம் சர்ச்சை - DMK அரசுக்கு சில கேள்விகள் | MK Stalin | Vikatan

GD Naidu என கோவை அவினாசி பாலத்துக்குப் பெயர் வைத்ததில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் தெருக்கள், சாலைகளில் இருக்கும் சாதி அடையாளப் பெயர்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு மா... மேலும் பார்க்க

`இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?' - ட்ரம்ப் சொல்லும் புது தகவல்!

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா. இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் பணத்தை, அது உக்ர... மேலும் பார்க்க