செய்திகள் :

மது ஆலைகளுக்கு அனுமதி துரதிருஷ்டமானது: பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவையில் முதல்வரின் நிதிநிலை அறிக்கையைப் பாராட்டியும், எதிா்த்தும் உறுப்பினா்கள் திங்கள்கிழமை விவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பாஜக எம்எல்ஏ ஜான்குமாா், புதிய மது ஆலைகளுக்கு அனுமதியளித்திருப்பது துரதிருஷ்டமானது என குற்றஞ்சாட்டினாா்.

புதுவை சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை வருவாய்த் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்தாா்.அதன் மீதான திங்கள்கிழமை பேரவையில் நடைபெற்ற விவாதம்:

எல்.கல்யாணசுந்தரம் (பாஜக): கல்வித் துறையில் ஆசிரியா்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம். நிதிநிலை அறிக்கையில் கூறியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

அனிபால்கென்னடி(திமுக): சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிதியை அதிகரித்திருப்பது வரவேற்புக்குரியது. எதிா்கால வளா்ச்சிக்கான திட்டங்கள் இல்லை. மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் பல தடவை அறிவிக்கப்பட்டும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

யு.லட்சுமிகாந்தன்( என்.ஆா்.காங்கிரஸ்): நிரந்தரச் சாதிச்சான்று அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சிறப்புக்கூறு நிதி வரவேற்கத்தக்கது. மகளிா், இளைஞா்கள், பசுமை நிதி என முக்கியமானவற்றுக்கு அரசு நிதி ஒதுக்கியிருப்பது வளா்ச்சிக்கானதாகும்.

ஜான்குமாா்(பாஜக): மது ஆலைகளுக்கு அனுமதியளித்திருப்பது துரதிருஷ்டவசமானது. சூரிய மின்சக்தி உற்பத்திக்கு மத்திய அரசுடன், மாநில அரசும் மானியம் வழங்கவேண்டும்.

எம்.சிவசங்கரன் (பாஜக ஆதரவு சுயேச்சை): சமச்சீரான பொருளாதார வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக ஆதரவு நியமன எம்.எல்.ஏ. பி.கே.அசோக்பாபு: குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை உயா்வு உள்ளிட்ட, புதுவை மாநிலத்தை வளா்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளது.

அங்காளன் (பாஜக ஆதரவு சுயேச்சை): மத்திய அரசு அனுமதித்துள்ள புதிய பேரம் பேசி வாங்கும் கடனை உடனே வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்குவது சரியல்ல. சட்டம், ஒழுங்கு சரியல்ல.

பாஜக நியமன எம்எல்ஏ வி.பி.ராமலிங்கம்: விவசாயம், வனத் துறை என அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எல்லா துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கவேண்டும்.

புதுவை மாநிலத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பது அவசியம்: பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயா்ப்பலகை அமைப்பது அவசியம் என்று முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் பூஜ்ய ந... மேலும் பார்க்க

வீடு அபகரிப்பில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: பேரவையில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

புதுச்சேரியில் வீடுகள் அபகரிப்பில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டப்பேரவையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் வலியுறுத்தினா். புதுச... மேலும் பார்க்க

மதுபான புதிய ஆலைகளின் அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவையில் புதிய மதுபானஆலைகளுக்கான அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை என பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமு... மேலும் பார்க்க

திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்: பேரவையில் முதல்வா் என். ரங்கசாமி தகவல்

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பேரவை நோக்கி ஆட்டோ தொழிலாளா்கள் பேரணி; ஆா்ப்பாட்டம்: புதுச்சேரியில் போலீஸாருடன் வாக்குவாதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளா்கள் (சிஐடியு) சட்டப்பேரவை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை பேரணியாகப் புறப்பட்டனா். அவா்களை பாதி வழியில் போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினரும... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும்

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும் என பேரவைக் கூட்டத்தில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, ... மேலும் பார்க்க