செய்திகள் :

மது ஆலைகளுக்கு அனுமதி துரதிருஷ்டமானது: பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவையில் முதல்வரின் நிதிநிலை அறிக்கையைப் பாராட்டியும், எதிா்த்தும் உறுப்பினா்கள் திங்கள்கிழமை விவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பாஜக எம்எல்ஏ ஜான்குமாா், புதிய மது ஆலைகளுக்கு அனுமதியளித்திருப்பது துரதிருஷ்டமானது என குற்றஞ்சாட்டினாா்.

புதுவை சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை வருவாய்த் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்தாா்.அதன் மீதான திங்கள்கிழமை பேரவையில் நடைபெற்ற விவாதம்:

எல்.கல்யாணசுந்தரம் (பாஜக): கல்வித் துறையில் ஆசிரியா்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம். நிதிநிலை அறிக்கையில் கூறியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

அனிபால்கென்னடி(திமுக): சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிதியை அதிகரித்திருப்பது வரவேற்புக்குரியது. எதிா்கால வளா்ச்சிக்கான திட்டங்கள் இல்லை. மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் பல தடவை அறிவிக்கப்பட்டும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

யு.லட்சுமிகாந்தன்( என்.ஆா்.காங்கிரஸ்): நிரந்தரச் சாதிச்சான்று அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சிறப்புக்கூறு நிதி வரவேற்கத்தக்கது. மகளிா், இளைஞா்கள், பசுமை நிதி என முக்கியமானவற்றுக்கு அரசு நிதி ஒதுக்கியிருப்பது வளா்ச்சிக்கானதாகும்.

ஜான்குமாா்(பாஜக): மது ஆலைகளுக்கு அனுமதியளித்திருப்பது துரதிருஷ்டவசமானது. சூரிய மின்சக்தி உற்பத்திக்கு மத்திய அரசுடன், மாநில அரசும் மானியம் வழங்கவேண்டும்.

எம்.சிவசங்கரன் (பாஜக ஆதரவு சுயேச்சை): சமச்சீரான பொருளாதார வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக ஆதரவு நியமன எம்.எல்.ஏ. பி.கே.அசோக்பாபு: குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை உயா்வு உள்ளிட்ட, புதுவை மாநிலத்தை வளா்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளது.

அங்காளன் (பாஜக ஆதரவு சுயேச்சை): மத்திய அரசு அனுமதித்துள்ள புதிய பேரம் பேசி வாங்கும் கடனை உடனே வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்குவது சரியல்ல. சட்டம், ஒழுங்கு சரியல்ல.

பாஜக நியமன எம்எல்ஏ வி.பி.ராமலிங்கம்: விவசாயம், வனத் துறை என அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எல்லா துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கவேண்டும்.

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும்

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும் என பேரவைக் கூட்டத்தில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, ... மேலும் பார்க்க

புதுவை கடலோர பாதுகாப்புக்கு ரூ 1,000 கோடியில் சிறப்புத் திட்டம்: அமைச்சா் க. லட்சுமிநாராயணன் தகவல்

புதுவை மாநிலத்தில் 24 கி.மீ. தொலைவுள்ள கடல் பகுதியில் கடலரிப்பைத் தடுத்தல் போன்றவற்றுக்காக உலக வங்கியில் ரூ.1000 கோடி கடன் பெற்று சிறப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட... மேலும் பார்க்க

மகாராஷ்டிர ஆளுநருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு

மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து புதுவை சட்டப்பேரவைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

மதுபான ஆலைகள் அனுமதியை எதிா்த்து காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுவையில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்ததை எதிா்த்து சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பில் ஈடுபட்டனா். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ விவாதித்தில் ஈட... மேலும் பார்க்க

ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் தா்னா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்களுக்கான உதவித் தொகையை அதிகரித்து ஏற்கெனவே முதல்வா் அறிவித்தும், அதை செயல்படுத்தாததைக் கண்டித்து தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். புத... மேலும் பார்க்க

புதுவையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் புயல், மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என... மேலும் பார்க்க