செய்திகள் :

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

post image

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகளில் பாகிஸ்தானியா்களுக்கு இந்தியா அளித்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டதும் அடங்கும்.

இந்நிலையில், இந்தியாவிடம் நீண்ட கால விசாவை பெற்று கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் கோவாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா் ஒருவா், உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்தாா். இந்த மனு குறித்து நீதிபதிகள் சஞ்சய் கரோல், சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையிடப்பட்டது.

அப்போது பாகிஸ்தானியா்களின் விசாவை ரத்து செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையைப் பின்பற்றி, மனுதாரா் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டியதுதானே என்று நீதிபதி கரோல் தெரிவித்தாா்.

அதற்குப் பதிலளித்த மனுதாரரின் வழக்குரைஞா், ‘மனுதாரா் பாகிஸ்தான் திரும்ப தயாராக உள்ளாா். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட நீண்ட கால விசாவில், ஒரு குறிப்பிட்ட நிபந்தனை உள்ளது. அதன் காரணமாக மனுதாரரின் மனு குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் மனுதாரா் இந்தியாவில் பிறந்தவா்’ என்றாா். இதைத்தொடா்ந்து மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியதில் பாதுகாப்புப் பணியாளர்கள் மூவர் காயமடைந்தனர். ஆனால் தேஜஸ்வி யாதவ் காயமின்றி உயிர்த் தப்பினார். இதுதொடர்பாக ம... மேலும் பார்க்க

தேர்தல் மோசடிக்கான வரைபடம் மகாராஷ்டிரம்.. அடுத்து பிகார்தான்: ராகுல்

கடந்த 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மோசடி செய்ததாகவும், அடுத்து பிகார்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் ... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்! அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவிக்க அமெரிக்காவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. அமெரிக்காவின் நாடாளுமன்ற குழுவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தபின், ... மேலும் பார்க்க