பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜ...
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்! அமெரிக்கா உறுதி
பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவிக்க அமெரிக்காவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது.
அமெரிக்காவின் நாடாளுமன்ற குழுவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தபின், அமெரிக்க வெளியுறவு துணைச் செயலாளர், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் அமெரிக்காவும் உறுதியாக நிற்கிறது.
எல்லைதாண்டிய பயங்கரவாதம், எந்த வடிவில் இருந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்று தனது உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துரைத்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தோம் என்று தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அழித்தது.
மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் எம்.பி.க்கள் அடங்கிய குழுக்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.