செய்திகள் :

மத்திய அரசு வாங்கவிருக்கும் கடன்! அதிகம் செலவிடும் துறை?

post image

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு தரப்பில் வரும் நிதியாண்டுக்காக ரூ.14.82 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் மிக முக்கிய அறிவிப்பாக தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதும், லித்தியம் பேட்டரி உள்ளிட்டவற்றுக்கு வரிச் சலுகை மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான வரித் தள்ளுபடிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பேட்டரிகளுக்கான வரிச் சலுகை மூலம் செல்போன் மற்றும் மின் வாகனங்களின் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் மத்திய பட்ஜெட்டில், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இதுவரை நாம் எண்ணியிருந்தது போல பாதுகாப்புத் துறைக்கு அல்லாமல், நாட்டின் போக்குவரத்துத் துறைக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, போக்குவரத்துத் துறைக்கு ரூ.5.48 லட்சம் கோடியும் அடுத்த இடத்தில் இருக்கும் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.91 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய ஆதாரமாக விளங்கும் வேளாண் துறைக்கு ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து கல்வித் துறை இடம்பெற்றுள்ளது. இதற்கு ரூ.1.28 லட்சம் கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.98,311 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிறகு உள்துறைக்கு ரூ.2.33 லட்சம் கோடியும் ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.2.66 கோடியும், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.69,777 கோடியும் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளது. சமூக நலன் துறைக்கு ரூ.60,052 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!

தில்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.தில்லியில் வருகிற புதன்கிழமையில் (பிப். 5) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மா... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி

மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய... மேலும் பார்க்க

பிரதமரின் இதயத்தில் நடுத்தர வர்க்கத்தினர்: பட்ஜெட் குறித்து அமித் ஷா புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்த எண்ணங்களே இருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பொ... மேலும் பார்க்க

வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனுடன், மாத வர... மேலும் பார்க்க

ரயில்வேயை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்! பங்குச் சந்தையில் எதிரொலி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறை தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், பங்குச் சந்தைகளில் ரயில்வே துறை தொடர்பான பங்குகள் கடு... மேலும் பார்க்க

பாஜக முக்கியத் தலைவர்களின் 3 மாதப் பயணச் செலவு ரூ. 168.9 கோடி!

மக்களவைத் தேர்தலின்போது பாஜக செலவினம் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செலவினங்கள் குறித்த அறிக்கையை இந்த... மேலும் பார்க்க