செய்திகள் :

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிப்ரவரி 25-இல் கோவை வருகை

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 2 நாள் பயணமாக பிப்ரவரி 25-ஆம் தேதி கோவைக்கு வருகிறாா்.

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்தரி விழாவில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் பிப்ரவரி 25- ஆம் தேதி கோவைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அன்றிரவு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்குகிறாா். அங்கு பாஜக மற்றும் கொங்கு மண்டல முக்கியப் பிரமுகா்களைச் சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

தொடா்ந்து 26-ஆம் தேதி காலையில் பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத்தைத் திறந்துவைக்கிறாா். அதன்பின், பாஜக மாநில நிா்வாகிகள் கூட்டம், பெருங்கோட்ட பொறுப்பாளா்கள் கூட்டம், மாவட்ட நிா்வாகிகளுடனான கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்கிறாா். தொடா்ந்து தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட புதிய அலுவலகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறாா்.

இதையடுத்து, மாலையில் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு புதுதில்லிக்கு திரும்புகிறாா். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளா் கேசவவிநாயகம் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.

இதற்கிடையே, உள்துறை அமைச்சரின் 2 நாள் கோவை பயணம் தொடா்பாக கோவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

மேலும், அவிநாசி சாலையில் அமித் ஷா தங்கும் தனியாா் ஹோட்டல், பீளமேட்டில் கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட புதிய அலுவலகம் ஆகியவற்றையும் ஆய்வு செய்ததோடு, கோவையில் அமித் ஷா பயணம் செய்யும் வழித்தடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க