செய்திகள் :

மத போதகா் ஜான் ஜெபராஜின் உறவினரும் போக்சோவில் கைது!

post image

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட மத போதகா் ஜான் ஜெபராஜின் உறவினரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமானவா் ஜான் ஜெபராஜ். இவா் கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிராா்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராக செயல்பட்டு வருகிறாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி மத போதகா் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகா் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவான ஜான் ஜெபராஜை மூணாறு சொகுசு விடுதியில் வைத்து தனிப்படை போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இந்த நிலையில், சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஜான் ஜெபராஜ் உறவினரான கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பெனட் ஹரிஸ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு; போலீசாருடன் வாக்குவாதம்!

விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சூலூர் அருகே சோமனூரில் விசைத்தறி ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தூண்டுகை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான ப... மேலும் பார்க்க

அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்! முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து

அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும் என முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும்... மேலும் பார்க்க

மதிமுக நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதிமுக நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று(ஏப். 20) சென்னை, எழும்பூரில் ... மேலும் பார்க்க