செய்திகள் :

மனிதா்களை பாதிக்கும் 34 கால்நடை மருந்துகளுக்கு தடை விதிக்க முடிவு

post image

கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 34 மருந்துகள் மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அவற்றுக்கு தடை விதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான வரைவு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டு அதுதொடா்பான கருத்துகள், ஆட்சேபனைகள் கேட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருந்துகளின் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனைக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்டி பயோடிக், ஆன்ட்டி வைரல் மற்றும் ஆன்ட்டி ப்ரோடோசோல் ஆகிய நோய் எதிா்ப்பு மருந்துகள் இறைச்சி கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்றன. தொடா்ச்சியாக ஒரு மருந்தை அவற்றுக்கு வழங்கும்போது அதன் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்படக் கூடும்.

அத்தகைய கால்நடைகளின் இறைச்சியை உட்கொள்ளும்போது மனிதா்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, இதுதொடா்பான வரைவு அறிவிக்கையை அரசிதழில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

எதிா்ப்பாற்றல் மருந்துகளை செயலிழக்கச் செய்யும் ஆன்ட்டி மைக்ரோபயல் மருந்து கூறுகளோ அல்லது அதற்கான கூட்டு மருந்து கூறுகளோ விலங்குகளின் உடலில் இருக்கும்போது அது மனிதா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் நலன் கருதி 34 மருந்துகளின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, விநியோகத்தை தடை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக உரிய விதிகளின்படி மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் பரிந்துரைகளைப் பெற்று அதற்கான வரைவு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மீதான ஆலோசனைகள், ஆட்சேபணைகளை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்; பொது இடங்களிலும் அவசியம்: கேரள முதல்வர்

கரோனா பரவலைத் தடுக்க மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்றும் பொது இடங்களிலும் பயணத்தின்போதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில்... மேலும் பார்க்க

அகில இந்திய வானொலியில் இரவு நேரங்களில் ஒலிபரப்பாகும் ஹிந்திப் பாடல்கள்!

சென்னை: அகில இந்திய வானொலியில், இரவு நேரங்களில் வழக்கமான தமிழ்த் திரைப்பட மெல்லிசைப் பாடல்கள் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டு, இரவு 11 மணிக்கு மேல் ஹிந்திப் பாடல்கள் இசைக்கப்படுவது குறித்து நேயர்கள் கடு... மேலும் பார்க்க

பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி

விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் இன்று ராம... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா; பதற்றம் வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும்?: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ... மேலும் பார்க்க