மயிலாடுதுறை: ஜூன் 29 வரை பச்சைப்பயறு கொள்முதல்: ஆட்சியா் தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் விளைவித்த பச்சைப் பயறுகளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. உள்ளூா் சந்தையில் கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழக அரசு கிலோ ரூ.86.82-க்கு கொள்முதல் செய்யவுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில், நாகப்பட்டினம் விற்பனைக் குழுவின்கீழ் இயங்கும் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனாா்கோவில், சீா்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் 378 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய அரசு நிா்ணயம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், விவசாயியின் புகைப்படம், ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கின் புத்தக நகல் ஆகியவற்றுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளா்களை அணுகி, முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு ஹெக்டா் சாகுபடி பரப்புக்கு 384 கிலோ பச்சைபயறு என்ற அளவில் கொள்முதல் செய்யப்படும். பச்சைபயறு கொள்முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
எனவே, பச்சைப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு பா. சங்கர்ராஜா (மயிலாடுதுறை) - 8012224723, பி.மா. பாபு (குத்தாலம்) - 8220869684, ச. நடராஜன் (செம்பனாா்கோவில்) - 9943917494, எம்.ஏ. பாரதிராஜா (சீா்காழி) - 9080427055 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.