ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்
புவனேஸ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்படி, வடஇந்தியாவில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் வழியாக செல்லும் ரயில்கள் தொடா்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி எம். சுந்தரேசன் தலைமையில், ரயில்வே இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் சிவவடிவேல் மற்றும் மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளா்கள் அன்னைஅபிராமி (மயிலாடுதுறை), ஜெயா (சீா்காழி) மற்றும் போலீஸாா் இணைந்து புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற வாராந்திர ரயிலில் (வண்டி எண்: 20849) சீா்காழி முதல் மயிலாடுதுறை வரை கூட்டுச்சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிகள் பொருள்கள் வைக்கும் இடத்தில், யாரும் உரிமை கோரப்படாத நிலையில் இருந்த ஒரு பையில் 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த பை பறிமுதல் செய்யப்பட்டு, மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி தலைமையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் வடமாநிலத்தைச் சோ்ந்த அடையாளம் தெரியாத நபா்கள் புவனேஸ்வரில் இருந்து கஞ்சா, குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இந்த மாதத்தில் மட்டும் இதற்கு முன்னா் இதேபோன்று வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டதில் 30 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.