செய்திகள் :

‘மயோனைஸ்’ உணவுக்கு தடை விதித்தது ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

post image

பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் ‘மயோனைஸ்’ உணவை குழந்தைகள் பெருமளவு விரும்பிச் சாப்பிடுவதால் அவா்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால், அதைத் தடை செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் 16 வயது சிறுமி அஸ்வினிக்கு இதய துவார அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், சிறுமி அஸ்வினியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் 16 வயது சிறுமி அஸ்வினிக்கு இதய துவார அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அந்தச் சிறுமி முழுவதுமாகக் குனமடைந்து நலமாக உள்ளாா். தனியாா் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை மேற்கொள்ள ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம், கட்டணமின்றி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

குழந்தைகளுக்கு ஆபத்து: பச்சை முட்டையின் மூலம் ‘மயோனைஸ்’ உணவு தயாரிக்கப்படுகிறது. அதனால், மனித உடலுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளன. மயோனைஸை குழந்தைகள் பெருமளவு விரும்பிச் சாப்பிடுவதால் அவா்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வெயில் அதிகரித்து வரும் சூழலில், முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோா் காலை முதல் மாலை வரை அவசியமின்றி வெளியே வருவதைத் தவிா்த்து கொள்ளுங்கள் என்றாா் அவா்.

சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: திருநெல்வேலியில், வங்கி ஒன்றில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் அளித்து ரூ.2 கோடி ஏமாற்றிய வழக்கை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

செப். 6 - தமிழக காவலர் நாள்: முதல்வர் அறிவிப்பு

ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான், 2026 ஆம் ஆண்டு இரண்டாவது பாகம் தொடங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு ... மேலும் பார்க்க

துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72,000த்தை நெருங்கிவிட்டது. இன்று(ஏப். 29) ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ரூ.320 உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனையாகிறது. மேலும் பார்க்க

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா ஆரம்பம்!

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, தமிழ் வார விழா இன்று முதல் மே 5 வரை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறத... மேலும் பார்க்க